இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்திருந்த உணவுகளை வீணாக்காமல் பசியால் இருப்பவர்களுக்கு கொடுத்த நண்பர்கள்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து

உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று

கூறப்படும் தீயநோய் அணுகுவது இல்லை…

இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.

உடனடியாக நமது நெல்லை கருணை டிரஸ்ட் நண்பர்களின் சிறிய முயற்சியினால் இரவு 12 மணிக்கு மேல் அந்த உணவுகளை எடுத்து சாலையோரங்களில் பசியில் இருப்பவர்களுக்கு வீணாக்காமல் கொடுத்தனர்

சக மனிதர்களின் பசியை போக்குவோம்